நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்ததே
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்ததே
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

(நியூயார்க்)

பேச்சு எல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவின் ஒளியில் முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசிதன்னை நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம்தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானது ஏனோ
வான் இங்கே நீலம் அங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

(நியூயார்க்)

நாட் குறிப்பில் தினம் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனெதன்ன தேனா
ஜில் என்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனது ஏனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல்கூட பனி கட்டி போல ஆகுமே

(நியூயார்க்)