கடலை பருப்பே,

தேர்தல் முடிந்து இவ்வளவு நாட்களாகியும், தலைவரிடமிருந்து கடிதம் இல்லையே என்று பரிதவித்து துடித்த தொண்டர்களுக்கு என்னுடைய முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இயந்திரத்தின் உதவியில் வாக்குகள் பெற்று நக்கல் சிரிப்பு சிரிக்கும் அரசியல் மக்குகளிடம் நான் கூறி கொள்வது எல்லாம் ஒன்று தான். ‘நீங்கள் பெற்றது இயந்திரத்தனமான வெற்றி. ஆனால் போட்டியாடமலே மக்கள் இதயத்தில் இடம் பெற்ற நமது கழகம் பெற்ற வெற்றி தான் தார்மீகரீதியான வெற்றி.’

அடுத்து நாம் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும். சென்ற முறை போல் அல்லாமல் தயாராக நாம் இருக்க வேண்டும். ‘உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது எப்படி’ என்று ஒரு கருத்தரங்கு ஸ்வீடன் நாட்டிலுள்ள கோத்தன்பர்க் நகரத்தில் நடைபெறுகின்றது. இரண்டு மாதம் நடைபெறும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள நமது கழகத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதை மெத்த மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொண்டர்கள் அனைவரையும் சந்தித்துவிட்டு செல்லலாம் என்ற எனது ஆசை நேரமின்மை காரணமாக நிராசையாக போனது :( எனினும், தொண்டர்களின் அன்பு வேண்டுகோளின்படி நான் லுப்தான்ஸா நிறுவனத்திடம் பேசினேன். அதன்படி, விமானம் கிளம்பிய பின் சென்னை மாநகரத்தை ஒரு முறை வட்டமிடும். நான் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து அனைவருக்கும் டாடா காட்டுவேன். ஆகவே அனைவரும் இன்று இரவு 01.45 மணிக்கு (இந்திய நேரப்படி) தங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து எனக்கு டாடா காட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

விமான பணிப்பெண்ணின் மீது ஓர் கண்ணுடன்,
பிரபு

பின் குறிப்பு:

ஸ்வீடனில் என்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,
நம்பர் 6,
விவேகானந்தர் தெரு,
ஸ்வீடன் குறுக்கு சந்து,
ஸ்வீடன் மாநகராட்சி,
ஸ்வீடன்

For those who cant understand tamil. Am leaving for Gothenburg, Sweden. Tata