கடலை பருப்பே,

ஒவ்வொரு அரசியல் கட்சியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை தருவோம் அதை தருவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி கொண்டிருக்கும் பொழுது, தங்கள் அபிமான கட்சியான தே.பொ.டி.க சும்மா இருக்கலாகுமோ?

இப்பொழுது தமிழகத்தில் செல்போன் கட்டணம் மிகவும் மலிந்துள்ளது. இதனால், அனைவரும் மிக நீண்ட நேரம் அளவளாவுகின்றனர். இதனால் பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    அலுவலகம் செல்லாமலே ‘Working from Home’ என்று புருடா விட்டுவிட்டு வீட்டில் இருந்தே காலத்தை கழிக்கும் மக்கள்

    இப்போ இரயில் நிலையம் சென்று கொண்டு இருக்கிறேன், இரயிலில் அமர்ந்து கொண்டு விட்டேன், இரயில் கிளம்பி விட்டது, TTR வந்து விட்டார், அனைவரும் தூங்கி விட்டனர், Network செல்ல போகிறது என்று Running Commentary கொடுக்கும் புதிதாக திருமணம் நிச்சயம் ஆன மக்கள்

    SMS forward அனுப்பினேனே அது very funny இல்ல? என்று நச்சரிக்கும் மக்கள்
    அமெரிக்காவில் இருக்கும் எனது காதலன் இன்று முழுவதும் குளிக்கவே இல்லையாம், எனக்கு அவனை பார்க்கனும் போல இருக்கு, மனசே சரியில்லை, என்று குவார்டர் அடித்து குப்புறப்படுத்துக்கொண்டிருந்த உயிர் தோழனை தொந்தரவு செய்த பிறகு, ‘Thank you so much for being there, Take care’ என்று ஐஸ் வைக்கும் மக்கள
    சன் டி.வி யில் ‘மின்னலே’ பாட்டு வருது, அதுல SPB chancea இல்லை கலக்கி இருப்பார், 1st stanza முடிஞ்ச உடனே ஒரு Interlude வரும், நல்லா இருக்கும் என்று பேசி பேசி பாட்டை இரசிக்க விடாமல் கழுத்து அறுக்கும் மக்கள்
    தி.நகர்ல இருந்து கிளம்பிவிட்டேன், நந்தனம் Signalல மாட்டி கொண்டேன், மத்ய கைலாஷ் நெருங்கி விட்டேன், வந்த உடனே Missed Call கொடுக்கிறேன் என்று ஒரு Missed callகாக 4 முறை Call செய்யும் அதிமேதாவிகள்

இவர்கள் அனைவரும் அனுபவிக்கும் பிரச்சனை என்ன? ஏற்கனவே தமிழகத்தில் வெயில் அதிகம். இதில் நீண்ட நேரம் பேசியதால் காது சூடாகி, வேர்த்து கொட்டும் நிலைக்கு ஆளாகின்றனர். எல்லோரும் Hands Free உபயோகிப்பதில்லை. அப்படியே Hands Free உபயோகப்படுத்தினாலும் காது வலிக்காதோ?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் காதில் பூ அணிவிப்போம் என்பதை பெருமையாக கூறிக்கொள்கிறோம். காதில் பூ அணிவதால், குளு குளு என்று இருக்கும். காது சூடாகது. பூ வாடி விடுமே? வண்டு மொய்க்குமே என்று நீங்கள் கேட்கலாம். 1 வருடம் வரை வாடாத பூவை நமது விஞ்ஞானி அணில் பிள்ளை கண்டு பிடித்துள்ளார். பூ வாடிய பிறகு ரேஷனில் புதிய பூ வாங்கிக்கொள்ளலாம். மற்றும் ஒவ்வொரு பூவிலும் Charlie scent அடிக்கப்பட்டிருக்கும். ஆகவே அந்த gabbu தாங்காமல் வண்டு ஒடிவிடும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் எங்களின் இந்த வாக்குறுதிக்காகவாது, தே.பொ.டி.க விற்கு வாக்களிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பூக்காரியிடம் பேரம் செய்து கொண்டிருக்கும்,
பிரபு